அமைச்சர் குறித்த கேள்விக்கு யாரு தெர்மாகோல் புகழா? தெர்மாகோல் புகழா என நக்கலாக கேட்ட ஸ்டாலின்!
அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த கேள்விக்கு யாரு தெர்மாகோல் புகழா? என கேட்டு ஸ்டாலின் நக்கலடித்துள்ளார்.
திருவாரூர்: அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த கேள்விக்கு யாரு தெர்மாகோல் புகழா? என கேட்டு ஸ்டாலின் நக்கலடித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர் ஆவியாவதை தடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் குறிப்பிட்ட தொலைவுக்கு தெர்மாக்கோலை கொண்டு மூடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரின் இந்த பிளான் புஸ்ஸானது.
அமைச்சர் திட்டத்தை செயல்படுத்திய சில நிமடங்களிலேயே காற்றின் வேகத்தால் போட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கியது. அமைச்சரின் இந்த பிளாப்பான பிளானை பல்வேறு தரப்பினரும் கிண்டலடித்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் மீம்ஸ், வீடியோ என பல வகைகளில் கலாய்த்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம் நிருபர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், யாரு தெர்மாகோல் புகழா, தெர்மாகோல் புகழா என நக்கலாக கேட்டார்.