மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களம் இறங்க ஸ்டாலின் வேண்டுகோள்
மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களம் இறங்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களம் இறங்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரே நாள் மழைக்கே வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்றார்.

தூர்வாராத அரசு
எண்ணூர் - முட்டுக்காடு இடையேயான கால்வாயை தூர்வாரியிருந்தால் சென்னை மாநகரில் எங்கேயுமே வெள்ள நீர் தேங்காது. மக்கள் மீது அக்கறையின்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதிலேயே எடப்பாடி பழனிசாமி அரசு குறியாக உள்ளது.

அரசு விழித்துக்கொள்ளுமா
அதிகாரிகள் முறையாக பணிகளை மேற்கொண்டிருந்தால் மழைநீர் தேங்க கூடிய நிலை ஏற்பட்டிருக்காது. இப்போதாவது அதிகாரிகள் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழக அரசு இனிமேலாவது விழித்து கொண்டு வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குதிரை பேர அரசு
மைனாரிட்டியாக உள்ள அரசை மெஜாரிட்டியாக்குவது எப்படி, யாருக்கு எவ்வளவு கமிஷன் தொகை கொடுத்து ஆட்சியை தக்க வைப்பது, வேறு அணிக்கு சென்று விடாமல் அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் தக்க வைப்பது எப்படி என்ற நோக்கத்திலேயே எடப்பாடி தலைமையிலான குதிரைபேர அரசு செயல்பட்டு வருவதாக சாடினார்.

அரசு செயலிழந்து விட்டது
மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுகவின் களம் இறங்க வேண்டும் என்றும் ஒரு நாள் மழையை சமாளிக்க முடியாமல் எடப்பாடி அரசு செயல் இழந்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

மழையால் ஒத்திவைப்பு
மேலும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருந்த எழுச்சி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ரீதியாக தோல்வியடைந்து விட்ட ஆட்சியை நீக்கும் எழுச்சி பயணம் வேறு ஒரு தேதியில் நடக்கும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications