23 வேட்பு மனுக்கள் நீக்கம் ஏன்.. சந்தேகம் கிளப்பும் மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஆர்.கே.நகர் தொகுதியில் 23 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் உள்நோக்கம் ஏதேனும் உள்ளதா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. ஜெயலலிதா உள்பட 55 பேர் மொத்தம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 32 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிரடியாக 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Stalin raises question on the rejection of 23 candidacies

சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதேசமயம், காந்தியவாதி சசி பெருமாளின் மனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து திருச்சி வந்த ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 23 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதா? இடைத்தேர்தலில் முறைகேடு நடக்கும் என்று தெரிந்து தான், தி.மு.க., புறக்கணித்தது என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+