Breaking News: திமுக தலைவரானார் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து
சென்னை: திமுகவின் பொதுக் குழு இன்று பொதுச் செயலாளர் க.. அன்பழகன் தலைமையில் கூடி அதில் கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவர் மற்றும் பொருளாளரை வாழ்த்தி திமுக முன்னணியில் பேசினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்
திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் விஜயம்
அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி
மலர் வளையம் வைத்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரைமுருகனும் அஞ்சலி
50 ஆண்டுகால வரலாற்றை எனது சிறு இதயத்திடம் தந்துவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டார்
எனது இதயம் அவர் தந்தது, அது அண்ணாவிடம் இரவலாக வாங்கியது-ஸ்டாலின்
எனது இறுதி இதய துடிப்பு இருக்கும்வரை, இறுதி மூச்சு இருக்கும்வரை உனக்காக போராடுவேன்-ஸ்டாலின்
கண் கலங்கியபடி பேசினார் மு.க.ஸ்டாலின்
ஸ்டாலின் நெகிழ்ச்சி உரையுடன் திமுக பொதுக்குழு கூட்டம் நிறைவுற்றது
இது புதிய நாம்.. அந்த அழகான எதிர்காலத்தில் கழகத்தினர் உள்ளனர்-ஸ்டாலின்
தன் ஜாதியை பெரிதாக நினைப்போர் அல்ல, அனைவரையும் உடன்பிறப்பாக நினைப்போர்-ஸ்டாலின்
பகுத்தறிவு எனும் அறிவு கொண்டு, ஆணும் பெண்ணும் இங்கு சமம் என்று மதித்தல் -ஸ்டாலின்
ஊடகங்கள் மற்றும் தனிமனித கருத்து சுதந்திரத்தை மீட்பது
பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதசாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல்-ஸ்டாலின்
இதுதான் எனது கனவுகள், இந்த நொடி முதல் மெய்ப்பிக்க போகிறது-ஸ்டாலின்
இது எனது கனவு மட்டுமல்ல, தமிழகத்தின் கனவு, வா, என்னோடு கைகோர்க்க வா-ஸ்டாலின்
வா.. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா
முதுகெலும்பு இல்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா
அழகான எதிர்காலத்தை மெய்ப்பிப்போம், நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என்று அழைக்கிறேன்-ஸ்டாலின்
பகல் கொள்ளையடித்துக் கொண்டுள்ளார்கள்- ஸ்டாலின்
தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிக்க வேண்டியதே நமது முதல் பணி-ஸ்டாலின்
தமிழகத்திலுள்ள இன்றைய ஆட்சி அவலத்தில் உள்ளது
இதை நினைக்கும்போது, நெஞ்சு பொறுக்குதில்லையே, அஞ்சி அஞ்சி சாவார் என்ற பாரதி வரி நினைவிற்கு வருகிறது
நாம் யார், நமது கொள்கைகள் என்ன, நமக்குள் இருக்கும் குறைகள், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது என்ன-ஸ்டாலின்
Chennai: MK Stalin addresses DMK members at party headquarters after being elected as President of Dravida Munnetra Kazhagam (DMK). #TamilNadu pic.twitter.com/CWRoD71NWA
— ANI (@ANI) August 28, 2018
கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி
புதிய வரலாறை நோக்கி தமிழகத்தையும், கழகத்தையும் அழைத்து செல்ல விரும்புகிறேன்
சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்பதே திமுகவின் 4 தூண்கள்--ஸ்டாலின்
சுயமரியாதை எனும் முதுகெலும்பு இல்லாத மாநில அரசு தமிழகத்தில் உள்ளது- ஸ்டாலின்
மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது
அந்தக் கட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.. இதையும் நினைத்துப் பார்க்கிறேன் - துரைமுருகன்
உன்னோடும், உன் தந்தையோடும் நடந்து வந்துள்ளேன் - துரைமுருகன்
நான் அண்ணாவோடு அரசியல் நடத்தியவர், கலைஞரோடு பழகியவன் - துரைமுருகன்
எத்தனையோ பதவிகளை திமுகவில் ஏற்றுள்ளேன் - துரைமுருகன்
ஆனால் நான் கழகத்தின் பேச்சாளன் என்பதில்தான் எனக்குப் பெருமை - துரைமுருகன்
எங்களைப் போல ஸ்டாலின் உணர்ச்சிவசப்படவில்லை -கனிமொழி
அவர் கோபப்பட்டிருந்தால் தமிழகம் பின்னால் வந்திருக்கும் -கனிமொழி
இளைஞர் பட்டாளம் ஸ்டாலின் பின்னால் வந்திருக்கும் - கனிமொழி
ஆனால் எத்தனை பாதிப்பு வந்திருக்கும், துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கும் - கனிமொழி
ஆனால் இதையெல்லாம் தவிர்த்து தலைவனாக உயர்ந்து நின்றார் ஸ்டாலின் -கனிமொழி உங்களில் ஒருவராக அவரை எழுந்து வா தலைவா என்று கூறி வணங்குகிறேன் - கனிமொழி
தமிழர்களின் மனதில் அது இடியாக இறங்கியது - கனிமொழி
நாங்கள் அனைவரும் துடித்துப் போனோம் - கனிமொழி
அனைவரும் மெரினாவில் போய் உட்காருவோம் என்றுதான் நாங்கள் சொன்னோம் - கனிமொழி
ஆனால் ஸ்டாலின் அமைதி காத்தார்.. வக்கீல்களோடு கலந்து பேசினார் - கனிமொழி
அடுத்த நாள் சாதகமாக தீர்ப்பு வந்தபோது அங்கேயே உடைந்து அழுதார் - கனிமொழி
தன் தலைவனிடம் சென்று அருகிலே அடைக்கலம் செய்யப்பட வேண்டும் என்பதே அந்த ஆசை - கனிமொழி
அந்த ஆசையை நிறைவேற்ற முடியுமா என்ற கவலை மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது - கனிமொழி
எத்தனையோ பேரைத் தொடர்பு கொண்டு அவர் பேசினார் - கனிமொழி
தனது தந்தையின் மரணத்திற்காகக் கூட ஸ்டாலினை அழ விடவில்லை இந்த அதிமுக அரசு - கனிமொழி
யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை - கனிமொழி
தலைவர் பதவி பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான் - கனிமொழி
கட்சியின் சட்டங்கள் கேட்கக் கூடிய நிகழ்வு - கனிமொழி
மனதில் முகத்தில் புன்னகையை புகட்டக்கூடிய வாய்ப்பை இந்த நாள் கொடுத்திருக்கிறது - கனிமொழி
ஸ்டாலின் தலைவர் என்பது புளகாங்கிதம், மகிழ்ச்சி, சந்தோஷம் - திருச்சி சிவா
ஓர் நாள் இரவிலே தலைவராகவில்லை - திருச்சி சிவா
ஏணியில்தான் வந்தார்.. அது நூலேறி, மர ஏறி அல்ல - திருச்சி சிவா
சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்தவர் ஸ்டாலின் - திருச்சி சிவா