இதற்காகத்தான் அவசரமாக கூடுகிறது செயற்குழு.. ஸ்டாலின் விளக்கம்
Recommended Video

சென்னை: திமுக செயற்குழு அவசரமாக கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவினர் சோர்வடைந்து துயரத்தில் மூழ்கியுள்ளனர். அவர் இல்லை என்ற எதார்த்தத்தையே மக்களால் இன்னும் ஏற்க முடியாத மன நிலைதான் நிலவி வருகிறது.

இந்த நிலையில் திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையில் கூட்டப்பட்டுள்ளது. இது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இதில் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.
இருப்பினும் மு.க.ஸ்டாலினிடம் இதற்கு வேறு விளக்கம் உள்ளது. இந்த செயற்குழுக் கூட்டம் ஏன் என்று இன்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடமே கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தவே இந்த செயற்குழு கூடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை என்று விளக்கினார் ஸ்டாலின்.
இதற்கிடையே, கருணாநிதியின் சமாதி உள்ள இடத்தில் மேற்கூரை போடப்பட்டு அந்த இடமே முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு நீட்டாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவினர் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் உள்ளனர். பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications