தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை ‘நமக்கு நாமே’ தொடரும்... ஸ்டாலின் அறிவிப்பு
ஈரோடு: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை "நமக்கு நாமே' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஆயத்த வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக பொருளாளர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘நமக்கு நாமே' என்ற பெயரில் பொதுமக்களை சந்தித்து குறைகேட்டு வருகிறார்.

அந்த வகையில் ஈரோடு அருகே, மேட்டுக்கடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "நமக்கு நாமே' விடியல் மீட்புப் பயண நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை சந்தித்து ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினர்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் "நமக்கு நாமே' பயணத்தை வெற்றிகரமாக நடத்தியதால் எனக்கு ஆணவம் ஏற்படவில்லை; பெருமை ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தக் கட்டமாக மக்கள் நலப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை "நமக்கு நாமே' நிகழ்ச்சிகள் தொடரும். மே மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி ஏற்படவுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications