ஜெ. 'எஸ்கேப்பாக'த்தான் நில ஆர்ஜித மசோதாவுக்கு 'எஸ்' சொன்னது அ.தி.மு.க.: மு.க.ஸ்டாலின் சாடல்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூ: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்து ஜெயலலிதா தப்ப வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அண்ணா தி.மு.க. ஆதரித்துள்ளது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போதுள்ள மோடி அரசு கொண்டு வந்துள்ள மசோதா, விவசாயிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Stalin sees motive behind AIADMK support to Land Bill

செல்வந்தர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இந்த மசோதா இருப்பது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அளித்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சி அரசும், அண்ணா தி.மு.க.வும் மீறிவிட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதா தப்பிக்கவே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை லோக்சபாவில் அதிமுக ஆதரித்திருக்கிறது.

வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+