மக்களை காப்பாற்ற நல்ல படகு வரும்... ஸ்டாலின் சொன்ன குட்டிக்கதை
தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராமஜெயம் மகள் திருமண விழாவில் குட்டி கதை கூறியுள்ளார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். மக்களை காப்பாற்ற நல்ல படகு வரும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி: திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தி பேசும் போது குட்டி கதைகள் சொல்வது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டைல். இப்போது அதே பாணியில் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசும் போது குட்டிக்கதை கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் - லதா தம்பதியர் மகள் ஸ்ரீஜனனிக்கும், ராதாகிருஷ்ணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியர் மகன் டாக்டர் விவேக்கிற்கும் திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று திருமணம் நடந்தது.

குட்டிக்கதை சொன்ன ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், சில தினங்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து வாட்ஸ் அப்பில் ஏராளமான கேலியான, கிண்டலான தகவல்கள் உலா வருகின்றன. நான் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன் என்று கூறினார் ஸ்டாலின்.

நல்ல படகு வரும்
ஒரு ஊரில் வறண்ட ஆறு ஒன்று இருந்தது. அந்த ஆற்றில் கிடந்த பெரிய மாமரத்தின் மூலம் மக்கள் அக்கரைக்கு சென்று வந்தனர். திடீரென அந்த ஆற்றில் வெள்ளம் வந்து பெரிய மாமரம் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் மற்றொரு சின்ன மாமரம் அந்த ஆற்றில் மிதந்து வந்தது. இதையடுத்து சிலர் அதில் ஏறி ஆற்றைக் கடக்க முயன்றனர். சிறிது தூரம் சென்ற பிறகுதான் அது சின்ன மா மரமல்ல. முதலை என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் கரையில் நின்றவர்களிடம் காப்பாற்றுங்கள் என கூறினர். கரையில் இருந்தவர்கள் நல்ல படகு ஒன்று வரும். அதில் ஏறி உங்களை வந்து காப்பாற்ற வருகிறோம். நீங்கள் அதுவரை உயிருடன் இருந்தால் உங்களை காப்பாற்றுவோம் என்றனர்.

சின்னம்மா வேண்டாம்
இதேபோல் ஒருவர் பஸ்சில் பயணம் செய்தார். அது பெண்கள் சீட், அந்த சீட்டுக்கு பெண்கள் வந்ததும், அந்த ஆண் எழுந்து வேறு ஒரு சீட்டுக்கு போனார். அங்கும் ஒரு பெண் வந்து விட்டார். அந்த சீட்டையும் விட்டு அப்போது அவர் எழுந்து போய் விட்டார்.ஒரு பெண் தனது கணவரிடம் சொல்கிறார். நான் இறந்து போய் விட்டால் பெண் பணியாளரை வேலையில் வைத்துக் கொள்ளாதீர்கள், வேலையில் இருந்து நீக்கி விடுங்கள் என்கிறார். அதற்கு அந்த கணவர் ஏன் என்று கேட்டதற்கு, நம் பிள்ளைகள் அந்த பணியாளரை நாளடைவில் சின்னம்மா என்று அழைக்கும் நிலை வந்து விடும் என்கிறார். இந்த நிலை தான் இன்று தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. இதை அரசியலோடு கலந்து கொள்ளக்கூடாது.

ஒரு ஓட்டு 3 சிஎம்
இப்போது தமிழகத்தில் ஒரேயொரு ஓட்டுக்கு 3 சி.எம்மை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலை தான் இன்று தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இதை அரசியலோடு கலந்து கொள்ளக்கூடாது. வாழ்க்கையும் ஒரு படகுதான். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சந்தித்து மணமக்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கூறி முடித்தார் ஸ்டாலின்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications