சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற அரும் பாடுபடுவேன் - மு.க.ஸ்டாலின் உறுதி !
சென்னை: தன்னை, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பதாவது: திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற கட்சி தலைவராக என்னை தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்டுள்ள சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற இந்த பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவேன். மக்களின் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான முறையில் அவையில் விவாதித்து சட்ட மன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற அரும் பாடுபடுவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications