For Daily Alerts
Just In
பலத்த காற்று வீசுகிறது, மக்களே பாதுகாப்பாக இருங்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள் #Vardah
புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: வர்தா புயல் காரணமாக பலத்த காற்றும், மழையும் பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள கோரிக்கை:
வர்தா புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதுடன், மழையும் பெய்வதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். வீடு மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்புடன் இருக்குமாறும், வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், அரசு துறைகள் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை முழுவதும் பேய்க்காற்று வீசி வருவதுடன் பலத்த மழையும் கொட்டி வருவதால் மக்கள் முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
Comments
cyclone vardah vardah strom chennai mk stalin dmk வர்தா புயல் புயல் காற்று சென்னை முக ஸ்டாலின் திமுக
English summary
DMK leader MK Stalin has urged the people to stay safe in Chennai as cyclone Vardah is all set to cross the shore.
Story first published: Monday, December 12, 2016, 12:27 [IST]