நெடுவாசலில் ஸ்டாலின் - கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டம்

நெடுவாசல் நடைபெறும் போராட்டக்க களத்துக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார் ஸ்டாலின்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித்தலைவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Stalin visits Neduvasal

கொட்டும் மழையில் போராட்டம் நைடைபெற்று வருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசலுக்கு நேரில் வந்து போராட்டத்தில் பங்கேற்று பேசினார். தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார்.

போராட்டக்களத்தில் பேசிய ஸ்டாலின், அரசியல் கலக்காமல் விவசாயிகளுக்காக விவசாயிகளால் நடைபெறும் போராட்டம் இது என்றார். மத்திய அரசு உடனடியாக இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார். இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உறுதிமொழியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார். மாநில அரசு அழுத்தம் தரவேண்டும் என்றார்.

Stalin visits Neduvasal

இதே நிலை நீடித்தால் உங்களோடு நானும் அமர்ந்து போராடுவேன். திமுக துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+