For Daily Alerts
Just In
பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.. சொல்கிறார் எச் ராஜா!
பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்சை சீற்றங்கள் ஏற்படுவதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்சை சீற்றங்கள் ஏற்படுவதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்து மதத்தை அழிப்பதே திராவிட கட்சிகளின் குறிக்கோள் என குற்றம்சாட்டினார்.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38000 கோயில்களில் 10000 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கடவுளை பட்டினிப்போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் எச் ராஜா தெரிவித்தார்.
ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கையை லஞ்சம் என்று கூறிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை எச் ராஜா நேற்று டிவிட்டரில் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
H Raja said that the result of the starvation of the God is causing natural disasters. He also accused Dravid parties wants to destroy the hindu religion.
Story first published: Sunday, November 26, 2017, 10:45 [IST]