மத்திய அரசுடன் இணக்கமாக போனால் தான் நிதி கிடைக்கும்.... சொல்றது செல்லூர் ராஜூ தான் மக்களே!
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் மாநில அரசுக்கு நிதி கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை : மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறில்லை, அவ்வாறு இணக்கமாக செயல்படுவதால் தான் நிதி கிடைப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. கட்சியைச் சேர்ந்த 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். சின்னம் கிடைத்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்.

நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் மத்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் ஜிஎஸ்டி வசனங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழக மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அவர்களுடன் முரண்பட்டால் எந்த திட்டத்திற்கும் நிதி பெற முடியாது. மாநில அரசுக்கு மத்திய அரசு நிறைய நிதி உதவி செய்துள்ளது. எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவில் டிஜிட்டல் உரிமைகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதால் தான் இதெல்லாம் கிடைத்திருக்கிறது. தேவையில்லாமல் அவர்களை பகைத்துக் கொள்வது தமிழக மக்களுக்கு நாமே செய்யும் தீங்காகும். அதிமுக மட்டுமல்ல திமுகவும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்துள்ளது.
திமுக மத்திய அரசுக்கு அடிமையாகவும் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டும் இருந்தது. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரம், ஈழத்தமிழர் பிரச்னை உள்ளிட்ட தமிழகர்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து தமிழக அரசு மத்திய அரசிடம் இழந்ததை சொல்லிக்கொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications