சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. தமிழக அரசு கொள்கை முடிவு.. சென்னை ஹைகோர்ட்டில் தகவல்
தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
தமிழக அரசு சிலை கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதை அடுத்து தற்போது தமிழக அரசு தானாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தற்போது தமிழகத்தில் சிலை கடத்தல் பிரச்சனை உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பழனியில் கோவிலில் மாற்றப்பட்ட சிலை தொடங்கி தமிழகம் முழுக்க முறைகேடாக திருடப்பட்ட சிலை வழக்கில் விசாரணை நடக்கிறது.
ஆனால் தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதில் தமிழக அரசின் நடவடிக்கையை சென்னை ஹைகோர்ட் கண்டித்து இருந்தது. மேலும் தமிழக அரசு சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் இன்று சென்னை ஹைகோர்ட்டில், தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
ஹைகோர்ட் விசாரணையில் தமிழக போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்று தமிழக அரசே சென்னை ஹைகோர்ட்டில் கூறியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை முறைப்படி சிபிஐக்கு விரைவில் மாற்றப்படும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications