முரசொலி செல்வம் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை
சென்னை: முரசொலி செல்வம் மீதான 12 அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முரசொலி செல்வம் மீது அதிமுக அரசு தொடர்ந்த 12 அவதூறு வழக்குகள், எம்.பி., எம்எல்ஏ மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, முரசொலி செல்வம் உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.

தான் எம்.பி., எம்எல்ஏவாகவோ மக்கள் பிரதிநிதியாகவோ இருந்ததில்லை என்று செல்வம் தனது மனுவில் தெரிவித்திருந்தார். தம் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இன்று வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, செல்வம் மீதான வழக்கு விசாரணைக்கு 2 வாரத்துக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
[நக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. என்ன காரணம்?]
மறைந்த, முன்னாள் முதல்வர், கருணாநிதியின் அக்கா மகன்தான் முரசொலி செல்வமாகும். முரசொலி மாறனின் சகோதரர்.












Click it and Unblock the Notifications