For Daily Alerts
Just In
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யுமாம்.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் சீரான மழை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சில இடங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் சீரான மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏராளமான மேகக்கூட்டங்கள் வரிசைக்கட்டி நிற்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் வேறு எங்கும் மழை பெய்யவில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Steady Rains to continue in Chennai. Both North Chennai and South Chennai could get some spell said Tamilnadu weatherman.
Story first published: Monday, November 13, 2017, 12:45 [IST]