முதல் மனைவியின் குழந்தைகளுக்கு சூடு வைத்த சித்தி – ஈரோட்டில் பரிதாபம்!
ஈரோடு: ஈரோட்டில் சிறுவயது பெண் குழந்தை ஒன்றிற்கு தந்தையின் இரண்டாவது மனைவி சூடு வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மெகதாஜ் பானு.
இவர்களுக்கு முகமது இப்ராகிம், என்ற மகளும் மகிமா பேகம் என்ற மகளும் உள்ளனர்.
முதல் மனைவி தற்கொலை:
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மெகதாஜ் பானு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டாம் திருமணம்:
இதனால் குழந்தைகளை கவனித்து கொள்ளவும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரிலும் அப்துல் வகாப் தாஜ் தவுலத் என்ற பெண்ணை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமான இரண்டாம் மனைவி:
திருமணம் ஆகி 2 மாதங்கள் தாஜ் தவுலத் தனது கணவனுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினார். இதன் காரணமாக அவர் கர்ப்பம் அடைந்தார்.
முதல் குழந்தைகள்:
இருப்பினும் தனது கணவர் முதல் மனைவியின் குழந்தைகளை அன்பாக கவனித்து கொள்வதை தாஜ் தவுலத்தால் பொறுத்துகொள்ள முடியவில்லை.
நேர்த்திக் கடன்:
இந்த நிலையில் நேர்த்தி கடன் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு தாஜ் தவுலத் முகமது இப்ராகிம், மகிமாபேகத்தை அழைத்து கொண்டு ஏர்வாடி சென்றார்.
கொடுமை செய்த சித்தி:
பிறகு அங்கிருந்து கூடலூர் நடுவட்டத்துக்கு அவர்களை அழைத்து சென்றார். அப்போது அப்துல் வகாப்பின் குழந்தைகளை அவர் அடித்து மேலும் சிறுமி மகிமா பேகத்துக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
தீவிர சிகிச்சை:
இதைதொடர்ந்து மகிமா பேகம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தவுலத் மற்றும் அவரது தாயாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications