ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமில கசிவு.. சீர் செய்யும் பணி தீவிரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கந்தக அமில கசிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கந்தக அமில கசிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தி வந்தார்கள். இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். அதன்பின் மக்கள் கோரிக்கையை ஏற்று ஆலை மூடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று பரபரப்பூட்டும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பணிக்கு இருந்த காவலர், இதனால் மயங்கி விழுந்துள்ளார்.
பழைய குழாயில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இதை அப்புறப்படுத்தப்படும் பணி இன்று தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்குள் கந்தகஅமிலக் கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீண்டும் கசிவு ஏற்படாத வண்ணம் சரிசெய்யப்பட்டு வருகிறது. கந்தக அமிலத்தை அகற்ற டேங்கர்லாரி பயன்படுத்தப்பட்டு வருகிறது.