தூத்துக்குடியில் போராடியவர்கள் வேறு.. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை.
ஆனால் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தும் இதே கருத்தை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைவிட பயங்கரவாதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications