எங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிலைநாட்ட யார் அனுமதிக்க வேண்டும்? தடையை மீறி கரிசல்குளத்தில் ஜல்லிகட்டு
எங்கள் விளையாட்டை விளையாட யார் அனுமதியும் எங்களுக்கு தேவை இல்லை என்று தடையை மீறி மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை: மதுரையில் உள்ள கரிசல்குளத்தில் உள்ள மைதானம் ஒன்றில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்தனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதுரை கரிசல்குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை இப்பகுதி மக்கள் செய்திருந்தனர். மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமஞ்சு விரட்டு என்று சொல்லக் கூடிய காளையின் கழுத்தில் கயிறு கட்டி விளையாடும் விளையாட்டும் நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் மதுரையில் பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறும் போது, "உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம். எங்கள் விளையாட்டை விளையாட நாங்கள் யாரை கேட்க வேண்டும். எங்கள் உரிமை இது" என்று ஆவேசமாக கூறினார்கள்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், இளைஞர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதனையடுத்து போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications