எங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிலைநாட்ட யார் அனுமதிக்க வேண்டும்? தடையை மீறி கரிசல்குளத்தில் ஜல்லிகட்டு
எங்கள் விளையாட்டை விளையாட யார் அனுமதியும் எங்களுக்கு தேவை இல்லை என்று தடையை மீறி மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை: மதுரையில் உள்ள கரிசல்குளத்தில் உள்ள மைதானம் ஒன்றில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்தனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதுரை கரிசல்குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை இப்பகுதி மக்கள் செய்திருந்தனர். மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமஞ்சு விரட்டு என்று சொல்லக் கூடிய காளையின் கழுத்தில் கயிறு கட்டி விளையாடும் விளையாட்டும் நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் மதுரையில் பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறும் போது, "உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம். எங்கள் விளையாட்டை விளையாட நாங்கள் யாரை கேட்க வேண்டும். எங்கள் உரிமை இது" என்று ஆவேசமாக கூறினார்கள்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், இளைஞர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதனையடுத்து போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications