காவிரிக்காக நாளை தமிழகத்தில் கடையடைப்பு.. மெடிக்கல்களும் இயங்காது!
காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது.
Recommended Video
சென்னை: காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. இதனால் நாளை மருந்துக்கடைகளும் இயங்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகம் முழுக்க மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அங்காங்கே போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 300 இணைப்பு சங்கங்கள் கடையடைப்பில் பங்கேற்க உள்ளது.
முக்கியமாக மருந்துக்கடைகளும் ஸ்டிரைக்கில் பங்கேற்க இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.
இதனால் நாளை எந்தவிதமான அவசர மருத்துவ பொருட்களும் வாங்க முடியாது. அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.