For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிருப்தி தேமுதிக பெண் எம்.எல்.ஏவிடம் போனில் 'கசமுசா' பேச்சு.. மாணவர் கைது!

Google Oneindia Tamil News

நாமக்கல்: அதிருப்தி தேமுதிக பெண் எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கத்திடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியதாக ஒரு நபரைப் போலீஸார் கைது செ்துள்ளனர்.

அந்த நபரின் பெயர் புண்ணியமூர்த்தி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர், வயது 26.

சாந்தி ராஜமாணிக்கம், சேந்தமங்கலம் தொகுதி சட்டசபை உறுப்பினர் ஆவார். தேமுதிகவில் இருந்து வந்தார். திடீரென முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏ.வாக மாறி விட்டார்.

சில தினங்களுக்கு முன்பு இவர் காரில் சென்னையிலிருந்து தனது ஊருக்குப் பயணப்பட்டார். அப்போது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாசமாகப் பேசியுள்ளார். அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு முகம் சுளித்து அதிர்ந்தார் சாந்தி ராஜமாணி்க்கம்.

இதுகுறித்து ஆயில்பட்டி காவல் நிலையத்தில் அவர் சார்பில் புகார் தரப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து அழைப்பு வந்தது தெரிய வந்தது. அங்கு போய் விசாரித்தபோது புண்ணியமூர்த்தி என்பவர் சிக்கினார். விசாரணையில் அவர்தான் சாந்தியிடம் ஆபாசமாக பேசியது தெரிய வந்தது.

தமிழ் மாணவர்...

புண்ணியமூர்த்தி பூண்டி கல்லூரியில் எம்.ஏ. தமிழ் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார். இவரது பொழுதுபோக்கே, பெண்களிடம் ஆபாசமாக பேசுவதுதானாம். இதுபோல பலருடன் பேசி டென்ஷன் கொடுத்துள்ளாராம். இதையடுத்து அவரைக் கைது செய்தனர் போலீஸார்.

English summary
Police have arrested a college student for making indecent call to woman MLA Shanthi Rajamanickam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X