சென்னை பல்கலை மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
சென்னை பல்கலைக்கழக மாணவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மாணவர் பெயர் தினேஷ் என்பதாகும். வியாசர்பாடியில் வசித்து வரும் தினேஷ் இன்று
தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அங்கிருந்த உறவினர்கள் தினேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் தினேஷ் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் தற்கொலைக்கு புளுவேல் விளையாட்டு காரணமாக என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications