For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் மரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் பிரவின் குமார் என்ற மாணவர், மர்மமான முறையில் பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் பிரவின் குமார் ஆகும். பிரவின் குமார் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23 ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரவின் குமார் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சின்னக்காலனி அருகிலுள்ள பயன்படுத்தப்படாத ஒரு கிணற்றில் பிரவின் குமார் பிணமாக கிடந்தது செப், 26 (இன்று) கண்டு பிடிக்கப்பட்டது. கிணற்றின் அருகில் அவரது கல்லூரி பை இருந்தது.

பிரவின் குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி உள்ளது.

English summary
A 20-year-old engineering student named Praveenkumar died under mysterious circumstances at a well in Madurandhakam on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X