மாணவன் தந்தை மரணத்திற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம்: உறவினர் குற்றச்சாட்டு
கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் என மாணவனின் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: மாணவன் தந்தை மரணத்திற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம் என கிருஷ்ணசாமியின் உறவினர் ராஜேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட் தேர்வை கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவர் எழுதிக் கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கடந்த 2 தினங்களில் நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மன உளைச்சல்களால் கிருஷ்ணசாமி மரணமடைந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த மரணம் குறித்து அவரது உறவினர் ராஜேஸ்வரி கூறும்போது, கிருஷ்ணசாமி தனது மொத்த உலகமும் அவரது மகன்தான் என்று வாழ்ந்ததாக தெரிவித்தார்.

மேலும் தன் மகனை ஒரு செஸ் சாம்பியனாக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கிருஷ்ணசாமி, அதற்காக நிறைய பாடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்திலேயே இந்த நீட் தேர்வு நடைபெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதே என ஆதங்கப்பட்ட ராஜேஸ்வரி, அலட்சியம், அஜாக்கிரதை காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த துயரத்திலிருந்து அந்த குடும்பம் மீள்வது மிகவும் கடினம் என்றும் வேதனையுடன் ராஜேஸ்வரி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications