திருவொற்றியூர் மாணவனுக்கு அரிவாள் வெட்டு: 2 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: சென்னை திருவொற்றியூரில் கல்லூரி மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் பத்மநாபா காலனியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் செல்வராஜ், 20. சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் 8ம்தேதியன்று காலை 7 மணியளவில் செல்வராஜ் திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்தனர். அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.
தலை, கையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே மர்ம ஆசாமிகள் இருசக்கரவாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த கொலை வெறி தாக்குதல் நடந்த போது பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அவர்கள் பயத்தில் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய செல்வராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் 2 கத்திகள் கிடந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செல்வராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியவர்கள் இன்னொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக கல்லூரி மாணவர்கள் பேருந்து வழித்தடம் அல்லது பெண்களை கிண்டல் செய்வதில் போட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக மோதுவது வழக்கம்.
இது தொடர்பாக செல்வராஜிடம் போலீசார் விசாரணை நடத்திய போதும் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தப்பி ஓடிய மாணவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாணவனை வெட்டிய வழக்கில் 2 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications