சென்னையில் நீட் கவுன்சலிங் நடைபெறும் இடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி போராட்டம்
சென்னையில் நீட் கவுன்சலிங் நடைபெறும் இடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் நீட் கவுன்சலிங் நடைபெறும் இடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நீட் கவுன்சலிங் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை அருகே புரட்சிகர மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசு நீட் தேர்வை உடனே ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். மேலும் அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே காரணம் என முழக்கம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்களை காவல் துறை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தில் அண்ணா சாலையில் ஒரு நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications