கலெக்டர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த மாணவர்கள் - அடிப்படை வசதிகளுக்காக போராட்டம்!
Subscribe to Oneindia Tamil
கள்ளகுறிச்சி: விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலம் முன் விஷம் குடித்த மாணவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், இதனை நிறைவேற்றி தர கோரி மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர் அக்கல்லூரி மாணவர்கள்.
இந்நிலையில், மனுவினை அளிக்க வந்த அவர்கள், கையில் வைத்திருந்த விஷத்தை கலெக்டர் அலுவலக வாயிலிலேயே குடித்தனர். இதையடுத்து மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பே 10 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் விஷம் குடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications