மதுரையில் நீட் தேர்வு குளறுபடி... தேர்வு மையம் முன்பு போராட்டம் செய்த மாணவர்கள் கைது
மதுரையில் நீட் தேர்வு குளறுபடியாக நடத்தப்பட்டு வருவதால் தேர்வு மையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

மதுரை: மதுரையில் நீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கியதால் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு எழுத சென்ற மதுரை நரிமேட்டில் 120 மாணவர்கள் சென்றனர். அவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இதையடுத்து 24 மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டது.

மீதமுள்ள 96 மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வினாத்தாள் லீக் ஆகியிருக்கலாம் என்றும் நீட் தேர்வு குளறுபடிகளாலும் தேர்வை செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரையில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களையும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாரமங்கலத்தில் கோபால் என்பவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications