மாணவர்கள் சாலை மறியல்.. 25 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பிப்பு.. முடங்கியது ஓஎம்ஆர்
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பழைய மகாபலிபுரம் சாலையில் 25 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. என்ன செய்வது என்று தெ
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இருந்து மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று பழைய மகாபலிபுரம் சாலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மறியலால் 25 கி.மீ தூரம் வரை சாலை முடக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதே போன்று, சென்னை தரமணியிலும் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தரமணியில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று போலீசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் தரமணியில் இருந்து திருப்போரூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கத்திலும் சாலை மறியல் நடைபெற்று வருவதால் சென்னை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சென்னையில் முக்கிய சாலையான அண்ணா சாலை, காமராஜர் சாலை, டாக்டர் நடேசன் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications