'மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது’.. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் அதற்கு பின்னர் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தந்தி டிவியில் பேட்டியளித்த மயிலாப்பூர் டிசி பாலகிருஷ்ணன் எதிர்காலத்தில் அமைப்பு, தலைமையில்லாத போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர மெரினா கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களுக்கு போலீசார் நெருக்கடி கொடுத்தனர். அதனை ஏற்க மாணவர்கள் மறுத்த போது, தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை நடு குப்பம், அம்பேத்கர் பலம், ரூதர் நகர், அயோத்திய குப்பம் என பல்வேறு இடங்களில் கல் எரிதல், தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் போலீசாரே தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.

தந்தி டிவியில் இதுதொடர்பான கேள்விகளுக்கு டிசி பாலகிருஷ்ணன் பதில் அளித்தார். அப்போது, தீ வைத்த போலீசார் யாராக இருந்தாலும், வீடியோவின் உண்மை தன்மையை அறிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எந்த நடவடிக்கை எடுத்தாலும் முழு விசாரணைக்குப் பின்னரே எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நெறியாளர் பாண்டே, அரசியல் தலைமை இல்லாத, அமைப்பு சாராத, தலைமை இல்லாத போராட்டங்கள் எதிர்க்காலத்தில நடக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, 'வாய்ப்பிருக்கிறது' என்று பாலகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று பாலகிருஷ்ணன் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரிமாறப்படுகிறது. அதனைக் கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும் என்றும் மயிலாப்பூர் டிசி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications