ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் போராட்டம்.. 35 பேர் கைது
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து மெரினா உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து மெரினா உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த 35 மாணவர்கள் தடையை மீறி மெரினா உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அவர்கள், நெடுவாசல் ஹட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வேண்டும். விவசாய நிலத்தில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் கைவிடவேண்டும்.
தாமிரபரணியில் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது. கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications