நில மோசடியில் ஈடுபட்ட பெண் சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக பெண் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். இவர் அங்கு ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை ஜோசப் சுனந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை பயன்படுத்தி இவரது உறவினர்களான லீலா, எபநேசர், வதனா, இனிகோ ரன்ஸ்நெட், பொன் செந்தில்முருகன் மற்றும் தூத்துக்குடி அப்போதைய சார்பதிவாளர் எஸ்கலின் ஆகியோர் சேர்ந்து போலியாக உயில், தானபத்திரம் உள்ளிட்ட 3 ஆவணங்களை தயாரித்து சொத்துகளை அவரது பெயருக்கு மாற்றினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சார்பதிவாளர் மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பதிவாளர் ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ்பி துரையிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு எஸ்பி துரை உத்தரவிட்டார்.

இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ சண்முகவடிவு, மோசடியாக ஆவணங்கள் பதிவு செய்ததாக லீலா, எபநேசர், வதனா, இனிகோ, ரனஸ்நெட், பொன் செந்தில்முருகன், இனியபுஷ்பம், எஸ்கலின் ஆகிய 6 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடைய இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் சிறியபுஷ்பம் எஸ்கலின் மீது துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+