வீடியோ கான்பரன்ஸ் மூலமே ஜெ. ஓட்டு கேட்கலாமே: இது சுப.வீ.யின் கிண்டல்!
லப்பைக்குடிகாடு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலமே ஓட்டு கேட்கவும் செய்யலாம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குன்னம் அருகே லப்பைக்குடிகாடு பேரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேசியதாவது:
எங்கள் நந்தனுக்கு வழிவிட மறுத்த தில்லை தான் (சிதம்பரம்) இன்று எழுச்சி தமிழர் திருமாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. மீண்டும் அனுப்ப காத்திருக்கிறது.

கோபாலபுரத்திற்கு சென்ற எவரும் சுயமரியாதையை இழந்து வெளியேறியதில்லை ஆனால் போயஸ் கார்டனுக்கு சென்ற எவரும் சுயமரியாதையோடு வெளியேறியதில்லை என்பது வரலாறு.
காணொளி காட்சிமூலம் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா, காணொளி காட்சி மூலமே மக்களிடம் வாக்கு கேட்க வேண்டியது தானே

உறவுகளின் அடையாளமான மோதிரம் சின்னத்தில் வாக்களித்து, எத்தனை மோடிகள் வந்தாலும், நம் உறவுகளை சிதைத்துவிட முடியாது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு சுப. வீரபாண்டியன் பேசினார்.












Click it and Unblock the Notifications