2ஜி வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு.. சுப்பிரமணிய சுவாமி
2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
Recommended Video

நெல்லை: 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

கொண்டாட்டம்
இதை பாஜக திமுக கூட்டணி மீது போடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் அந்த வழக்கு பொய்யானது என்பதையே ஷைனியின் தீர்ப்பு காட்டுவதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் டெல்லியையே அமர்க்களப்படுத்தினர்.

மோசமான தீர்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது ஷைனியின் தீர்ப்பு. இதுகுறித்து 2ஜி வழக்கில் முதல்முதலாக வழக்கு தொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் மோசமான ஒரு தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் நான் முறையீடு செய்ய உள்ளேன்.

பின்னடைவும் இல்லை
இந்த வழக்கு விசாரணையை சில அதிகாரிகள் நேர்மையாக நடத்தவிலை. டெல்லி சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பால் இந்த வழக்குக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

வெற்றி நிச்சயம்
இந்த நிலையில் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது அவர் கூறுகையில், 2 ஜி வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யும்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications