For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு.. சுப்பிரமணிய சுவாமி

2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது -சுப்பிரமணியன் சாமி - பரபர பேட்டி- வீடியோ

    நெல்லை: 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    இதை பாஜக திமுக கூட்டணி மீது போடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் அந்த வழக்கு பொய்யானது என்பதையே ஷைனியின் தீர்ப்பு காட்டுவதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் டெல்லியையே அமர்க்களப்படுத்தினர்.

    மோசமான தீர்ப்பு

    மோசமான தீர்ப்பு

    இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது ஷைனியின் தீர்ப்பு. இதுகுறித்து 2ஜி வழக்கில் முதல்முதலாக வழக்கு தொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் மோசமான ஒரு தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் நான் முறையீடு செய்ய உள்ளேன்.

    பின்னடைவும் இல்லை

    பின்னடைவும் இல்லை

    இந்த வழக்கு விசாரணையை சில அதிகாரிகள் நேர்மையாக நடத்தவிலை. டெல்லி சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பால் இந்த வழக்குக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

    வெற்றி நிச்சயம்

    வெற்றி நிச்சயம்

    இந்த நிலையில் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது அவர் கூறுகையில், 2 ஜி வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யும்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தார்.

    English summary
    Subramanian swamy will file appeal plea against 2G spectrum judgement. He says he will win in this appeal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X