தாம்பரம், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை 2-வது நாளாக அடியோடு ரத்து!!
சென்னை: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்- செங்கல்பட்டு; அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழைவெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. ரயில் பாதைகளில் பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கிக் கிடக்கின்றன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு; சென்னை- அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரயில்களும் நேற்று அடியோடு ரத்து செய்யப்பட்டன.
2வது நாளாக ரத்து
இன்றும் மழைவெள்ளம் வடியாமல் மீண்டும் மழை கொட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் மட்டும் இன்று 2வது நாளாக மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்; சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்; சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர்- ஆவடி- அரக்கோணம்- திருத்தணி ஆகியவழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சென்னை கடற்கரை- ஆவடி- திருவள்ளூர்- அரக்கோணம்- திருத்தணி; கும்மிடிப்பூண்டி- எண்ணூர் ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கம் போல சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில்சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications