சென்னையில் சட்டென மாறிய வானிலை.. பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை.. ஜில் மோடில் மக்கள்!
சென்னையின் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: மெரினா, பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது
தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வபோது நல்ல மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு பாரமுகமாகவே இருந்து வருகிறது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப்போனால் கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெயில் வெளுத்து வாங்கியது.
வெயிலால் அவதி
இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
பல இடங்களில் மழை
இந்நிலையில் பிற்பகலுக்குப் பின் சென்னையின் பல பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறியது. வளசரவாக்கம், போரூர், உள்ளிட்ட இடங்களில் மழை மேகங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் மழை
இதேபோல் சென்னை மெரினா, வடபழனி, பூவிருந்தவல்லி, மாங்காடு, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
காற்றுடன் கனமழை
திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், விருகம்பாக்கம், முகப்பேர், உட்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்துவருகிறது.
கோடையில் முதல் மழை
பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை வெளுத்து வருகிறது. கோடையில் முதல் முறையாக சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு