ஜல்லிக்கட்டுக்காக செங்கல்பட்டில் 3வது நாளாக உண்ணாவிரதம்... 4 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு

செங்கல்பட்டில் ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்த 4 பேர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்க்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஜல்லிக்கட்டுக்காக மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் 4 பேருக்கு இன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Sudden sick for 4 people in Chengalpattu hunger strike

அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது,

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+