கடலூரில் சாலை மறியல்- தொண்டர்களுடன் கைதான பிரேமலதா
கடலூர் நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காததைக் கண்டித்து கடலூர் நெல்லிக்குப்பத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போராட்டம் நடைபெற்றது. இதே போல ஆம்பரில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது கரும்பு நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி தேமுதிக நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.
அப்போது பிரேமலதா உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பிரேமலதாவிடமும், தேமுதிக தொண்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் போலீசார் பிரேமலதாவை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முழக்கமிடவே அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications