ஈரோடு 103... கரூர், வேலூர், நாமக்கல் 102 டிகிரி - திருச்சி, வேலூரில் வெயில் அதிகரிக்குமாம்!
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையை நீடிக்கும் என்றும் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: கோடை காலம் தொடங்கும் முன்பே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஈரோடு நகரில் 103 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஒரு வாரத்தில் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . சென்னையில் இன்றைய வெப்பநிலை 93.2 பாரன்ஹீட்டாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பம் அதிகரிப்பு
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடைகள் பிடித்து கொண்டு செல்கின்றனர். சாலையோரங்களில் உள்ள குளிர்பானக்கடைகள், இளநீர், பழக்கடைகள் என மக்கள் தஞ்சம் அடைகின்றனர். குடிப்பதற்கு குளிர்ந்த நீரை பருகி வருகின்றனர்.

அனல் காற்று
இந்த ஆண்டும் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்றும் குறிப்பாக ஆந்திரா , குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும், அனல் காற்று வீசும் என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரகாலமாகவே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லவே சிரமப்படுகிறார்கள்.

ஈரோடு 103 டிகிரி
கடந்த இரண்டு தினங்களாக ஈரோடில் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியுள்ளது. ஈரோடு நகரில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தாகத்தை தணிக்க கரும்புச்சாறு, பழச்சாறு, மோர், கூழ், இளநீர், தர்ப்பூசணி, முலாம்பழம் போன்றவற்றையும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

வெயிலூர் ஆன வேலூர்
வேலூர், கரூர், நாமக்கல் நகரங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரை, கோவை திருப்பூரில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. ஒரு வாரத்தில் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னை 93.2 டிகிரி பாரன்ஹீட்
சென்னையில் 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகவில்லை. பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மாலை நேரங்களில் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications