ஈரோடு 103... கரூர், வேலூர், நாமக்கல் 102 டிகிரி - திருச்சி, வேலூரில் வெயில் அதிகரிக்குமாம்!
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையை நீடிக்கும் என்றும் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: கோடை காலம் தொடங்கும் முன்பே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஈரோடு நகரில் 103 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஒரு வாரத்தில் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . சென்னையில் இன்றைய வெப்பநிலை 93.2 பாரன்ஹீட்டாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பம் அதிகரிப்பு
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடைகள் பிடித்து கொண்டு செல்கின்றனர். சாலையோரங்களில் உள்ள குளிர்பானக்கடைகள், இளநீர், பழக்கடைகள் என மக்கள் தஞ்சம் அடைகின்றனர். குடிப்பதற்கு குளிர்ந்த நீரை பருகி வருகின்றனர்.

அனல் காற்று
இந்த ஆண்டும் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்றும் குறிப்பாக ஆந்திரா , குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும், அனல் காற்று வீசும் என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரகாலமாகவே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லவே சிரமப்படுகிறார்கள்.

ஈரோடு 103 டிகிரி
கடந்த இரண்டு தினங்களாக ஈரோடில் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியுள்ளது. ஈரோடு நகரில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தாகத்தை தணிக்க கரும்புச்சாறு, பழச்சாறு, மோர், கூழ், இளநீர், தர்ப்பூசணி, முலாம்பழம் போன்றவற்றையும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

வெயிலூர் ஆன வேலூர்
வேலூர், கரூர், நாமக்கல் நகரங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரை, கோவை திருப்பூரில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. ஒரு வாரத்தில் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னை 93.2 டிகிரி பாரன்ஹீட்
சென்னையில் 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகவில்லை. பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மாலை நேரங்களில் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications