தலையை தூக்கி வானத்தைப் பார்க்க முடியலை.. அம்புட்டு வெயில்.. 6 நகரங்களில் சதம்!
தமிழகம் முழுவதும் பல நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. ஈரோடு, கரூர் உள்ளிட்ட 6 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளான நேற்று 9 மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. திங்கட்கிழமையான இன்றும் அதிகபட்சமாக ஈரோடு நகரில் 104 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தலைநகர் சென்னையில் வெளியின் தாக்கம் அதிகம் தெரியவில்லை. எனினும் மாலை நேரங்களில் கடற்கரைகளில் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
கடலோர மாவட்டங்களை விட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திங்கட்கிழமையான இன்று பதிவான வெப்பநிலை பாரன்ஹீட்டில்:
ஈரோடு -104
கரூர் - 103
மதுரை - 102
சேலம் -101
திருச்சி - 101
திண்டுக்கல் - 100
தருமபுரி -100
திருநெல்வேலி - 99
சென்னை - 90












Click it and Unblock the Notifications