கோடை விடுமுறை முடிவு: பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
நெல்லை: தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்ல குடும்பத்துடன் பலர் கிளம்பி சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள், அவரது பெற்றோர் தங்களது உறவினர்கள் வீடுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையடுத்து சொந்த ஊர் திரும்பியிருந்த பலரும் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பகுதிக்கும் விரைந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி, சென்னை, வேலூர், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதன் காரணமாக நெல்லை புதிய பேருந்து நிலையம், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டதால் பலர் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் பொது பெட்டிகளில் கால் வைக்க கூட இடமில்லை. பலரும் நீண்ட நேரமாக நின்று கொண்டே பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் தனியார் பேருந்துகளையும் நாடியதால் அவர்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணத்தை கூட்டி வசூலித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பயணிகளுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளை இது போன்ற நேரத்தில் கூடுதலாக இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications