சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது - பெண் செய்தியாளருக்கு சம்பளம் தராமலும் இழுத்தடித்தாராம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொலைக்காட்சித் துறையில் முன்னணி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் சி.ஓ.ஓ ஒருவர் பாலியல் புகாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சன் டிவி குழுமத்தின் மலையாள நெட்வொர்க் சேனலான சூர்யா டிவியின் தலைமை இயக்க அதிகாரியாக பணியில் இருந்தவர் பிரவீன்.

இவர் மீது செய்திப் பிரிவில் பணியாற்றிய, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிரவீனைக் சென்னையில் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் அளித்த புகாரில், பிரவீன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி, ஊதியம் சரியாக வழங்காமல் மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications