இடைவிடாத சீரியல்கள்!... சன்டிவியில் மதிய செய்திக்கு மூடுவிழா!!
சன் டிவியில் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரைக்கும் இடைவிடாமல் சீரியல் ஒளிபரப்பாவதால் பிற்பகல் நேர செய்திகள் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டனர்.
சன் டிவி தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் அதாவது 1995 ஆம் ஆண்டுமுதல் பிற்பகல் 1.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் செய்திகள் ஒளிபரப்பானது.
தூர்தர்சன் செய்திகளை மட்டுமே பார்த்து வந்த மக்கள் கேபிள் டிவி வந்த பின்னர் சன்டிவியில் செய்திகளை பார்ப்பதில் ஆர்வம் காட்டினர்.

தனி செய்தி சேனல்
செய்திகளின் தேவையை புரிந்து கொண்ட சன் டிவி நிறுவனம் 2000மாவது ஆண்டில் சன் நியூஸ் என்ற 24 மணி நேர தனி செய்தி சேனலையே தொடங்கியது.

சன் செய்திகள்
தனி செய்தி சேனல் இருந்தாலும் சன் டிவியில் தொடர்ந்து இரண்டு நேரம் செய்திகள் ஒளிபரப்பாகின. இந்த இரண்டு சேனல்களுக்கு இடையே கூட சில நேரங்களில் போட்டி ஏற்படுவது உண்டு.

ஊத்தி மூடப்பட்ட சன் செய்திகள்
சீரியல்களின் வருகை அதிகரித்ததை அடுத்து சன்டிவியில் பிற்பகல் 2 மணிக்கு செய்தி ஒளிபரப்பு நேரம் மாறியது. பின்னர் 2.30 ஆகி தொடர்ந்து 3 மணிக்கு பிற்பகல் செய்தி ஒளிபரப்பானது. ஆனால் 3 மணிக்கும் புதிய சீரியல் ஒளிபரப்ப ஸ்லாட் ஒதுக்கப்படவே கடைசியில் செய்தி ஒளிபரப்புவதையே ஊத்தி மூடிவிட்டனர்.

எத்தனை சீரியல்கள்
சொந்தபந்தம் தொடங்கி பொம்மலாட்டம், தேவதை, மரகதவீணை, பொன்னூஞ்சல், இளவரசி,சந்திரலேகா, கல்யாணப்பரிசு,வள்ளி என பகல் நேரங்களில் சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகின்றன.

இரவு செய்திக்கும் மூடுவிழா?
அதேபோல மாலை நேரத்தில் 6 மணி தொடங்கி இரவு 11 மணிவரை சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. 7 மணிக்கு போனால் போகிறதென்று செய்தி ஒளிபரப்பாகிறது. அதுவும் 10 நிமிடம் சாமி, பேய், திருவிழா என்று சிறப்பு ஸ்டோரி போட்டுவிட்டு பிற செய்திகளை செய்தி சாரலாக படித்துவிடுகின்றன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அந்த அரைமணிநேரத்தையும் ஏதாவது சீரியலுக்கு கொடுத்துவிட்டு இரவு நேர செய்திகளுக்கும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications