காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் தக்க பதிலடி.. தமிழிசை ஆவேசம்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் வரைவு செயல்திட்ட அறிக்கையை வரும் மே 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழதுக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, காவிரி தீர்வை நோக்கி சட்டரீதியான நகர்வில் மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என்றும் அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் சரியான பதிலடி கொடுத்துள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்திற்காக மத்திய அரசை குறைகூறி போராடி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய தமிழிசை, அமைதி காக்கவேண்டும் என நீதிமன்றம் கூறியதன் மூலம் போராட்டங்கள் தேவையற்றது என்பதை உணர்த்துகிறது என்றும் கூறினார்.