தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்...விளக்கமளிக்க சட்டமன்ற சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் செயலருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், மோகன்தாஸ், பார்த்திபன், சேகர், வெங்கடேசன், தினகரன் ஆகியோர் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தாகக் கூறி, கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தாக்கல் செய்த மனுவில், தங்களை இடைநீக்கம் செய்திருப்பதால் தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது என்றும், எனவே இடைநீக்கத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications