100 ரூபாய் மாமூல் கேட்டு டெம்போவை உடைத்த “சஸ்பெண்ட்” காவலர் கைது
சேலம்: சேலத்தில் நூறு ரூபாய் மாமூல் கேட்டு டெம்போவை சேதப்படுத்திய பணியிடைநீக்கத்தில் உள்ள போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவர் மினி டெம்போவில் ஊர் ஊராகச் சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார். இந்த மினி டெம்போவை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் ஓமலூரில் இருந்து சின்ன திருப்பதி செல்லும் சாலையில் பெரும்பள்ளம் என்ற இடத்தில் புதன்கிழமை சேட்டு தனது டெம்போ ஆட்டோவில் வெங்காய வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் டெம்போவை வழிமறித்து தான் போலீஸ்காரர் என்றும், நூறு ரூபாய் மாமூல் கொடுக்கவேண்டும் என்றும் அந்த நபர் கேட்டு மிரட்டியுள்ளார். யாராக இருந்தாலும், பணம் கொடுக்க முடியாது என டெம்போ ஓட்டுநர் தினேஷ்குமார் கூறிவிட்டார்.
இதனால் கோபமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் அருகில் கிடந்த கல்லை எடுத்து டெம்போ வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ஆட்டோவை சேதப்படுத்தியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரைப் பிடித்து வைத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், பணம் கேட்டு மிரட்டிய நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் ஓமலூர் அருகேயுள்ள கொங்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்றும், இவர் தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வேலை செய்வதாகவும் மாறி மாறி கூறியுள்ளார்.
தீவட்டிப்பட்டி போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர் தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வேலை செய்ததும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருவதும், அடிக்கடி மது போதையில் இதுபோன்று மாமூல் கேட்டு வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications