மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது மர்ம விமானம் பறந்ததா?
நெல்லை: நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது மர்ம விமானம் பறந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு வட்டத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் அருகே வெளி ஆட்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மையத்தின் சுற்றுப் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மலைப்பகுதியின் மேலே சிறிய விமானம் ஓன்று பறந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியை 3 முறை வட்டமடித்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்திலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிறகு அது தூத்துக்குடியை நோக்கி பறந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி பொதுமக்கள் பலரும் மகேந்திரகிரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினரும், பனகுடி போலீசாரும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள வனப்பகுதியில் சூறவாளி ஊத்து என்ற பகுதி வரை சென்று சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக மகேந்திரகிரி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, விமானங்களை கண்காணிக்க கூடிய ரேடார் போன்ற வசதிகள் எங்களிடம் இல்லை. அதனால் ஆராய்ச்சி மையத்தின் மேல்பகுதியில் மர்ம விமானம் பறந்ததா என்று தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
மர்ம விமானம் பறந்ததை விட இந்தப் பதில்தான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கண்காணிப்பு ரேடாரோ, பிற கருவிகளோ பொருத்தப்படாதது மக்களை அதிர வைத்துள்ளது.
ராக்கெட் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் குறித்த ஆய்வுகள் மகேந்திரகிரி மையத்தில் முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய ராக்கெட்களி்ல் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்கள் இங்குதான் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்து இன்னொரு ஏவுதளத்தை மகேந்திரகிரியில் நிர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது. அந்த அளவுக்கு முக்கியமானது இந்த மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications