தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதாலேயே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை இல்லை: பத்திரிகையாளர்கள் கண்டனம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதாலேயே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை இல்லை என்று பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை : தனது அரசியல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பின்னணியை வைத்துக்கொண்டு, போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து எஸ்.வி சேகர் தப்பித்து வருவதாக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பாஜக பிரமுகரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்த நிலையில், ஒரு வார காலத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துஇருந்தார்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கில் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பல பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ராமதிலகம் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பத்திரிகையாளர் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

எஸ்.வி சேகர் மனு
மிகப்பெரிய குற்றம் இழைத்த எஸ்.வி சேகரை போலீஸார் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதாகவும், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.மேலும், தனக்கு வேறு ஒருவர் அனுப்பிய செய்தியையே பார்வார்டு செய்திருந்ததாகவும், எஸ்.வி சேகர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்த நிலையில், அந்த நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இளங்கோ நீதிபதியிடம் முறையிட்டார்.

பெங்களூருவில் தலைமறைவு
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் தலைமறைவாக இருக்கும் எஸ்.வி சேகர் எந்த நேரத்திலும் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.வி சேகர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக கைது
இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் கவின் மலர் கூறுகையில், பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி சேகரை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதாலும், பாஜகவின் பின்புலம் இருப்பதாலுமே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications