ப்ளஸ் 2: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்வப்னா முதலிடம்: 3 பள்ளிகள் 100% தேர்ச்சி
சென்னை: ப்ளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரில் ஸ்வப்னா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரின் தேர்ச்சி விபரத்தை மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
சென்னை மாநகராட்சியில் ஸ்வப்னா 1, 200க்கு 1,166 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். புவனேஸ்வரி, ராமலட்சுமி ஆகிய மாணவிகள் 1, 157 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
தரணி, ஜோதி ப்ரியா, சஞ்சனா ஆகியோர் 1, 155 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.
3 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களில் 78.15 சதவீதம் பேரும், மாணவியரில் 91.09 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications